https://suruthy.blogspot.com/

என்னால் முடிந்த நல்லவற்றை மற்றவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற நல்ல எண்ணத்தோடு இந்த பிளாகரை ஆரம்பிக்கின்றேன். தொடர்புகளுக்கு Facebook-anokaran,மொபைல்0778705960

www.suruthy.blogspot.com

Thursday, May 29, 2025

பழமொழிகள் :

பழமொழிகள் :

1.) ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்.
பொருள்: 
மற்றவர்கள் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் உன் குழந்தை தானே வளர்ந்து விடும்.
உண்மையான பொருள்: 
ஊரான் வீட்டு பிள்ளையாகிய உன் கர்ப்பிணி மனைவியை பாசத்துடன் ஊட்டி வளர்த்தால், அவள் வயற்றில் இருக்கும்  உன் குழந்தையும், ஆரோக்கியமாக தானே வளரும் என்பதே உண்மையான பொருள்.

2.) கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை.
பொருள்: 
கழுதைக்கு கற்பூர வாசம் தெரியாது.
உண்மையான பொருள்: 
'கழு தைக்க தெரியுமாம் கற்பூர வாசனை'.
கழு என்பது ஒரு வகை கோரைப்புல். அதில் பாய் தைத்து படுத்து பார்த்தால் கற்பூர வாசனை தெரியும் என்பதே சரியான விளக்கம்.

3.) ஆயிரம் பேரை கொன்றவன் அரை வைத்தியன் ஆவான்.
பொருள்: 
ஆயிரம் மக்களை (நோயாளிகளை) கொன்றவன் பாதி வைத்தியன்.
உண்மையான பொருள்:
ஆயிரம் வேரை கொண்டவன் அரை வைத்தியன் ஆவான்.
நோயை போக்க ஆயிரம் வேரை கொண்டு மருந்து கொடுப்பவன் அரை வைத்தியன் ஆவான்.

4.) களவும் கற்று மற.
பொருள்:
தீய பழக்கமான களவு (திருட்டை)  நாம் கற்று கொண்டு,  மறந்து விட வேண்டும்
உண்மையான பொருள்:
களவும், கத்தும் மற.
களவு – திருடுதல்; கத்து- பொய் சொல்லுதல். தீய பழக்கமான திருடுதல், பொய் சொல்லுதல் இவற்றை ஒருவன் தன் வாழ்நாளில் மறந்து ஒழுக்கமாக இருக்க வேண்டும்.

5.) சேலை கட்டிய பெண்ணை நம்பாதே!
பொருள்:
சேலை கட்டும் பெண்களை நம்பாதே!
உண்மையான பொருள்:
சேல் அகட்டிய பெண்ணை நம்பாதே!
சேல் என்பது கண்ணை குறிக்கும். கணவன் உடனிருக்கும் போது, (சேல்) கண்ணை அகட்டி வேறொருவனை பார்க்கும் பெண்ணை நம்ப கூடாது.

6.) அரசனை நம்பி புருசனைக் கைவிட்டது போல
பொருள்:
அரசனை மேல் (ஆசை) நம்பிக்கொண்டு, தன கணவனை கைவிட்டது போல.
உண்மையான பொருள்:
அரசினை நம்பி புருசனைக் கைவிட்டது போல
அரசினை என்பது அரச மரத்தை குறிக்கும். திருமணமான பெண்கள் பிள்ளைப்பேறு பெற அரச மரத்தை சுற்றுவார்கள். கட்டிய கணவனை கவனிக்காமல் வெறும் அரச மரத்தை சுற்றுவது பயன் தராது.

7.) மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கலாமா?
பொருள்:
மண் குதிரையில் ஆற்றை கிடந்ததால், உடனே மண் கரைந்து, ஆற்றில் மாட்டி கொள்ள நேரிடும்.
உண்மையான பொருள்:
மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்கலாமா?
மண் குதிர் என்பது ஆற்றின் நடுவில் இருக்கும் மணல் திட்டு /மேடு. இதை நம்பி ஆற்றில் இறங்கினால் ஆற்றில் சிக்கி கொள்ள நேரிடலாம்.

8.) வர வர மாமியார், கழுதை போல ஆனாளாம். 
பொருள்: 
அழகாக/அறிவாக நடக்கும் ஒருவர், நாளடைவில் மாறி  நடந்தால், இப்படி சொல்லுவார்கள்.
உண்மையான பொருள்:
வர வர மாமியார், கயிதை போல ஆனாளாம்.
கயிதை என்பது ஊமத்தங்காயை குறிக்கும். ஆரம்பத்தில் ஊமத்தம் பூவாக இருக்கும் போது பார்க்க அழகாக இருக்கும். பின்னர் நாளாக நாளாக அது காயாக மாறி, சுற்றிலும் முள் போல இருக்கும். கொடிய விஷம் கொண்டது. அது போல மாமியார் பேசுவதும்,நடப்பதும், நாளாக நாளாக கயிதை போல இருக்கும் என்று அர்த்தம்.

9.) ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்.
பொருள்: 
ஐந்து பெண்களை பெற்றெடுத்தால், அவர்களுக்கு செய்ய திருமணம், சீர் போன்றவற்றை செய்து முடிப்பதற்குள் அரசனும் ஆண்டி ஆண்டி ஆகிவிடுவான் .
உண்மையான பொருள்:
கீழ்க்கண்ட ஐந்தும் கிடைத்தால் அரசனும் ஆண்டி ஆவான். 1.ஆடம்பரமாய் வாழும் தாய்; 2.பொறுப்பு இல்லாமல் போகும் தகப்பன்; 3.ஒழுக்கம் தவறும் மனைவி; 4.துரோகம் செய்யும் உடன் பிறப்பு; 5.பிடிவாதம் பிடிக்கும் பிள்ளை. இந்த ஐந்தும் கொண்ட எந்தக் குடும்பமும் முன்னுக்கு வராது என்பதே பொருள்.

10.) பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க!
பொருள்: 
மணமான பின், பதினாறு குழந்தைகளை பெற்று வளமான வாழ்க்கை வாழ வேண்டும் என ஆசிர்வாதம் செய்வார்கள்.
உண்மையான பொருள்:
வாழ்க்கையில் 16 வகையான செல்வங்களான உடலில் நோயின்மை, நல்ல கல்வி, தீதற்ற செல்வம், நிறைந்த தானியம்,ஒப்பற்ற அழகு, அழியாப் புகழ், சிறந்த பெருமை, சீரான இளமை, நுண்ணிய அறிவு, குழந்தைச் செல்வம், நல்ல வலிமை, மனத்தில் துணிவு, நீண்ட வாழ்நாள் (ஆயுள்), எடுத்தக் காரியத்தில் வெற்றி, நல்ல ஊழ் (விதி), மற்றும் இன்ப நுகர்ச்சி பெற்று வளமாக வாழுங்கள் என்று பொருள்.

11.) ஆவதும் பெண்னாலே, அழிவதும் பெண்னாலே!
பொருள்: 
நன்மை நடப்பதும், தீமை நடப்பதும்  பெண்கள்  கையில் தான் இருக்கிறது.
உண்மையான பொருள்:
நன்மை நடப்பதும், தீமை அழிவதும் பெண்ணால் தான் நிகழ்கிறது என்று அர்த்தம் கொள்ள வேண்டும்.

12.) பந்திக்கு முந்து ! படைக்கு பிந்து !!
பொருள்:
பந்திக்கு முதலில் போய் உட்கார்ந்து கொள்ள வேண்டும்;இல்லாவிடில் பலகாரம் நமக்கு முழுமையாக கிடைக்காது, போருக்கு செல்பவன் படைக்கு பின்னால் நின்று கொள்ள வேண்டும். அப்படி செய்தால், உயிருக்கு ஆபத்து வராது.
உண்மையான பொருள்:
பந்திக்கு முந்து என்பது சாப்பிட போகும் போது நமது வலது கை எப்படி முன்னோக்கி செல்கிறதோ, அது போல போரில், எவ்வளவு தூரம் வலதுகை வில்லின் நாணலை பிடித்து பின்னால் இழுக்கிறதோ, அந்த அளவுக்கு அம்பு வேகமாய் பாயும். இது போருக்கு போகும் வில் வீரருக்காக சொல்லியது

13.)  வீட்டுக்கு வீடு வாசப்படி  !!
பொருள்:
ஒவ்வொரு வீட்டுக்கும் ஓவ்வொரு பிரச்னை இருக்கும்.
உண்மையான பொருள்:
மேன்மையான வாழ்க்கை என்னும் வீட்டுக்கு ஆன்மிகம் என்னும்  வீடு தான் வாசற்படி என்பதே சரியான பொருள்.

14.) கல்லைக் கண்டா, நாயைக் காணோம்! நாயைக் கண்டா, கல்லைக் காணோம்!!
பொருள்:
நாயை பார்க்கும் போதெல்லாம் அதை அடிக்க கல் அகப்படுவதில்லை; அதுபோல கல்லை காணும் போதும் அடிவாங்க நாய் சிக்குவதில்லை.
உண்மையான பொருள்:
கோவிலில் கால பைரவர் சன்னதியில் நாயின் சிலை செதுக்கப்பட்டிருக்கும். அதை கலை கண்ணொடு பார்த்தால், நாய் போல தெரியும்; வெறும் கல் என நினைத்தால், நாய்  தெரியாமல் கல் தான் தெரியும். எந்த ஒரு செயலும் தெரிவது/செய்வது, அவரவர் பார்வையில்/செயலில் தான் உள்ளது.

15.) புண்பட்ட மனதை புகை விட்டு ஆத்து.
பொருள்:
மனது புண்பட்டிருக்கும் போது புகை விட்டு (புகையிலை) ஆற்றி கொள்ள வேண்டும்.
உண்மையான பொருள்:
புண்பட்ட மனதை புக விட்டு ஆற்று.
மனது புண்பட்டிருக்கும் போது,  தமக்கு பிடித்த வேறொரு செயலில் மனதை புக விட்டு ஆற்றி கொள்ள வேண்டும் என்பதே சரி.

16.) விருந்தும் மருந்தும் மூன்று நாள்.
பொருள்:
விருந்துக்கு சென்றால், மூன்று நாட்களுக்கு மேல் இருக்க கூடாது. மருந்து உட்கொண்டாலும் மூன்று நாட்களுக்கு மேல் உண்ண கூடாது. அது எந்த ஒரு தனி மனிதனையும் பாதிக்கும்.
உண்மையான பொருள்:
ஒரு வாரத்தில் ஞாயிறு, திங்கள், புதன் ஆகிய குளிர் நாட்களில் நன்றாக உணவு உட்கொள்ள வேண்டும். செவ்வாய், வெள்ளி, வியாழன் ஆகிய தினங்களில் உணவை குறைவாய் உட்கொண்டு  மருந்து உண்ண வேண்டும்.

17.) போக்கத்தவனுக்கு போலீஸ் வேலை, வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை. 
பொருள்:
என்ன வேலைக்கு போவது என தெரியாமல் நிற்பவன் தான் போலிஸ் வேலைக்கு போவான்; வேறு வேலைக்கு போக வழி தெரியாதவன் வாத்தியார் வேலைக்கு போவான்.
உண்மையான பொருள்:
மற்றவருக்கு போக்கு கற்று கொடுப்பவனுக்கு போலீஸ் வேலை;
வாக்கு கற்று கொடுப்பவனுக்கு வாத்தியார் வேலை என்பது சரியான பொருள்.

18.) சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்
பொருள்:
சட்டியில் என்ன (சோறு) இருக்கிறதோ அது தான் நமக்கு கிடைக்கும்.
உண்மையான பொருள்:
சஷ்டியில் விரதம் இருந்தால் கருப்பையில் குழந்தை வரும்.
குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் கந்தர் சஷ்டியில் விரதம் இருந்தால் கருப்பையில் குழந்தை உருவாகும் என்று பொருள் கொள்ள வேண்டும்.

19.) ஆறிலும் சாவு; நூறிலும் சாவு.
பொருள்:
ஆறு வயதிலும் சாவு வரும்;நூறு வயதிலும் சாவு வரும்.
உண்மையான பொருள்:
மகாபாரதத்தில் கர்ணன், பஞ்ச பாண்டவர்கள் (ஐவர்) பக்கம் இருந்தாலும், கெளரவர்கள் (நூறு பேர்) பக்கம் நின்றாலும்,  போரின் போது இறப்பு வரும். ஆதலால் துரியோதனன் மீதுள்ள நட்பின் காரணமாக கெளரவர்களிடமே இருக்கிறேன் என்று சொன்னது.

20.) மாமியார் உடைத்தால் மண் குடம்; மருமகள் உடைத்தால் பொன் குடம்.
பொருள்:
ஒரே தவறை மாமியார் செய்யும் போது அது பெரிதாகக் கருதப்படுவதில்லை. ஆனால், வீட்டுக்கு வந்த மருமகள் அதே தவறைச் செய்துவிட்டால், அதை மாமியார் பெரிதுபடுத்திவிடுகிறார் எஎன்று பொருள் வருகிறது,
உண்மையான பொருள்:
மாமியார் உழைத்தால் மண்ணுக்கு உரம்-மருமகளும் உழைத்தால் பொன்னுக்கு உரம் என்பது தான் உண்மையான பழமொழி. விவசாயி வீட்டில் மாமியாரும் மருமகளும் சேர்ந்து நிலத்தில் உழைத்தால் பொன்னும், பொருளும் சேரும் என்பது அர்த்தம்.

இன்னும் நம் வழக்கில் உபயோகப்படுத்தும் பழமொழிகள் நிறையவே இருக்கிறது. அதைப் பற்றி அடுத்தடுத்த பதிவுகளில் காணலாம்.


நன்றி !!!

நன்றி அன்புடன்
hi friendsa how are you all
நன்றி அன்புடன்

Thursday, November 14, 2019

உங்களுக்கு பிறக்கும் குழந்தை எப்படி இருக்கும் கண்டறிய இணையம்

எல்லோருக்கும் எதிர்காலம் பற்றி அறிய ஆசை அதனால் தான் ஜாதகத்தை எடுத்துகொண்டு ஜோதிடர் வாசலை தட்டுகிறோம் . தங்களுக்கு பிறக்கும் குழந்தை எப்படி இருக்கும் என்று நானறிந்தவரை எந்த ஜோதிடரும் சொல்லியதில்லை உங்களின் குழந்தையின் குணத்தினை வேண்டுமானால் ஜோதிடர் சொல்லலாம் . பிறக்க போகும் குழந்தை ஆனா பெண்ணா வைத்தியர் சொல்லலாம் இதோ இந்த இணையம் தருகிறது உங்களுக்கு பிறக்கும் குழந்தையின் முக தோற்றத்தை .


இதற்கு உங்களின் புகைப்படமும் உங்கள் மனைவி அல்லது கணவன் புகைப்படமும் அல்லது காதலர்கள் ஆயின் காதலர்கள் இருவரின் புகைப்படங்களை இந்த தளத்தில் கொடுத்து உங்களின் எதிர்கால வாரிசின்  அழகிய தோற்றத்தை காணலாம் .



முதலில் தளத்தில் சென்று உங்களின் படங்களை ஒவ்வொன்றாக UPLOAD  செய்யுங்கள் படத்தின் முகத்தினை மட்டும் தளத்தில் தெரிவு செய்யுங்கள் .

பின்னர் உங்கள் குழந்தைக்கு நீங்கள் சூட்ட விரும்பும் பெயரை குறிப்பிட்டு நிறத்தினையும் குறிப்பிட்டு PROCEED  என்பதை கிளிக் செய்தால் போதும் . உங்கள் குழந்தயின் தோற்றத்தை காணலாம்.

 தள முகவரி  இங்கே 

உங்கள் குழந்தையின் தோற்றத்தை கண்டதும் கடுப்பாகி கமெண்ட் பண்ணாதிங்கப்பா.
இது ஒரு வேடிக்கையான தளம்  நண்பர்களே! சில வேளைகளில் சரியாகவும் வரும் முயற்சி செய்து பாருங்களேன்;


நன்றி அன்புடன்
thanking you visitors

Monday, June 24, 2019

இணையத்தில் தமிழ் மின்னூல்கள் பயனுள்ள பக்கங்கள்

ஈழத்து மின்னூல்கள்

ஈழத்து எழுத்தாவணங்களை அடுத்த தலைமுறையினரின் பயன்பாட்டிற்கு கிடைக்கக் கூடியதாக எடுத்துச்செல்ல வேண்டும் எனும் நோக்கில், தன்னார்வலர்களின் கூட்டுழைப்பால், ஈழத்து நூல்கள் மின்னூல்களாக (E- Book) "நூலகம்" தளத்தில் பதிவேற்றி வைக்கப்படுகின்றன.

Friday, January 11, 2019

மொபைல் போன்களை வைத்தே Document களை ஸ்கான் செய்யலாம் PDFஆக மாற்றலாம்/ android mobile scanner

நாங்கள் இதுவரைக்கும் கணிணி பற்றியே பாா்த்துக் கொண்டிருக்கின்றோம் ஆனால் இப்போது யாரும் கணிணியை விட மொபைல் சாதனங்களையே பாவிப்பது அதிகமாகிக் கொண்டிருக்கின்றது.

எதற்கெடுத்தாலும்  Android மொபைல் பாவிக்கும் நாங்கள் அதில் செய்யக் கூடிய பலவற்றை அறியாமல் இருக்கத்தான் செய்கின்றது.

Thursday, August 10, 2017

Drop Box பயன்படுத்துவது எப்படி ?



Simplify Your Life



Dropbox என்றால் என்ன ? இதனை நாம் நம் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்வதால் நமக்கு என்ன பயன் ? இதனை நாம் நம் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்து பயன்படுத்துவது எப்படி ? என்பதை பற்றி நாம் இந்த பாடத்தில் தெளிவாக பார்ப்போம்.....

ஆரம்ப காலத்தில் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள் தங்களுடைய Personal File களை கம்ப்யூட்டரில் சேமித்து வைத்து பயன்படுத்தும்பொழுது அந்த பைல்களை இன்னொரு காப்பி எடுத்து வைத்துக்கொண்டு தேவையான நேரங்களில் தம் கம்ப்யூட்டரிலோ அல்லது  வேறு கம்ப்யூட்டரிலோ பயன்படுத்துவதற்கு Floppy Disk என்ற ஒன்றை பயன்படுத்தினார்கள். 

                                                                                                                    Floppy Disk ( 1.44 MB Capacity )
                        
இந்த Floppy Disk ன் மொத்த அளவு எவ்வளவு தெரியுமா ? 1.44 MB மட்டும் தான். இந்த 1.44 MB அளவில் தான் நாம் நம் பைல்களை சேமிக்க முடியும். 2 MB அளவில் உள்ள ஒரு பைலை நாம் இந்த Floppy ல் சேமிக்க முடியாது. அப்படி என்னதான் இதில் நாம் சேமிப்பது ? Windows 95 மற்றும் 98 பயன்படுத்தும் காலத்தில் நாம் சேமிக்க நினைப்பது ஆடியோ அல்லது வீடியோ பைல்களை அல்ல. Microsoft Excel மற்றும் Word File களை மட்டும்தான். இந்த மைக்ரோசாப்ட் ஆபீஸ் பைல்கள் ஒவ்வொன்றும் 50 KB, 200 KB, 300 KB என்ற அளவில்தான் இருக்கும். இந்த பைல்களில் 10 அல்லது 15 பைல்களை நாம் இந்த ஒரு Floppy Disk ல் மொத்தமாக சேமித்து வைத்து Backup Disk ஆக இதனை பயன்படுத்திக்கொள்வோம்.

அப்படி இருந்த காலம் மாறிப்போய் இப்பொழுது USB Pen Drive பயன்படுத்தும் காலம் வந்துவிட்டது.

Saturday, August 5, 2017

கம்ப்யூட்டரில் Plug-ins என்றால் என்ன ? அதன் பயன்கள் என்ன ?






கம்ப்யூட்டரில் பயன்படும் Plug-ins என்றால் என்ன ? இதன் பயன்கள் என்ன ?

தமிழில் கம்ப்யூட்டர் தகவல்கள் தளங்களுக்கு வரும் அதிகமான நண்பர்கள் கேட்க்கும் கேள்விகளில் இதுவும் ஒன்று.

பொதுவாக Plug-ins என்பதன் அர்த்தம் ஒன்றுடன் தன்னை இணைத்துக்கொள்வது. தன்னிச்சையாக செயல்படும் திறம் அற்றது.  அதாவது இந்த Plug-in களை மட்டும் வைத்து நீங்கள் தனியாக பயன் அடைய முடியாது. நாம் பயன்படுத்தும் ஒரு பொருளுக்கு கூடுதலாக சக்தியை கொடுப்பதற்கு இதனை நாம் பயன்படுத்த முடியும்.